Tuesday, January 26, 2010

பிரபுதேவாவின் இயக்குனர் அவதாரம் -வரமா , சாபமா


ஒரு காலத்தில் ஆடினார் பிறகுஆட்டுவித்தார் அப்புறம் நடித்தார் இப்போது இயக்குகிறார் . பிரபு தேவாவின் பரிணாம வளர்ச்சி இதுதான் . இது அவரின் கிராப்பில் சரியான வளர்ச்சிதானா ?

நடித்து இயக்குபவர்கள் உண்டு . இயக்குனர் ஆகி நடிகரானவர்கள் உண்டு. அனால் நடிகராக இருந்து விட்டு பிறகு இயக்குனர் ஆவது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான் .

கடவுளின் குழந்தைகள் என்று அழைக்கப்படும் அளவிற்கு ஒரு ஹீரோவிற்கு பலவித சிலாக்கியங்கள் உண்டு. மேகப் போட ஒருவன் ஷு போட ஒருவன் தவிர புத்தம் புது ஹீரோயின்கள் .

ஆனால் இந்த சிலாக்கியங்கள் எல்லாம் ஒரு இயக்குனருக்கு கிடையாது . அவர் மிகப்பெரிய இயக்குனராக இருந்தால் ஒழிய. ஆனால் பொறுப்புகள் அதிகம்.

நடிகர் ரிஸ்க் எடுத்து நடித்தாலும் அதோடு அவரின் கடமை முடிந்தது . அனால் ஒரு இயக்குனருக்கோ படம் வெளி வருகின்ற வரைக்கும் பொறுப்புகள் உண்டு .

இதில் கதாநாயகர்கள் அடிக்கின்ற கூத்து வேறு. அனைத்து டெக்னிசியன்களையும் அனுசரித்து ஒன்றிணைத்து சென்று படத்தை முடிக்கவேண்டும் .

இங்குதான் பிரபுதேவாவின் இயக்குனர் அவதாரம் சாபமாகிறது .ஒருகாலத்தில் ஹிட்டான நடிகராக இருந்துவிட்டு , இயக்குனர்களை எல்லாம் , தான் சொல்லும்படிதான் ஷாட்டு வைக்கவேண்டும் என்று சொல்லி ஆட்டி படைத்து விட்டு இப்போது அவரே இயக்குனர் ஆகி இருப்பது நிச்சயம் அது வரமாக இருக்கமுடியுமா என்ன ?

அவர் நடித்த படங்கள் எல்லாம் வரிசையாக ஊத்தி கொள்ள இன்று வேறு வழி இல்லாமல் இயக்குனர் ஆகி இருக்கின்றார் .

ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர் ரஜினி 2000 என்கிற கலை நிகழ்ச்சி நடந்த போது அதில் சில டான்ஸ் சீன்கள் அமைத்து கொடுக்க வந்திருந்தார் பிரபுதேவா . அந்த சமயத்தில் அவருக்கு கதை சொல்ல அவரை பார்த்து பேச காத்திருந்தவர் இயக்குனர் தரணி .வருகின்ற நடு ஹிட் கொடுக்கவில்லை . காத்திருந்த அவரை பார்த்தபோது அவரிடம் யோவ் ஏன்யா பின்னாடியே வந்து உயிரை எடுக்கிற வேற வேலைய பாருயா என்று எரிந்து விழுந்திருக்கின்றார் பிரபுதேவா . இன்று அவரும் நித்தியகண்டம் பூர்ண ஆயுசு உள்ள ஒரு இயக்குனர் .

இது வரமா சாபமா?

....

No comments: